சுப்பு
சுப்பு காஸ் கோடோனில் வேலை செய்து வந்தார். திரை இசைப் பாடல்கள் கொண்ட புத்தகங்கள் நிறைய வைத்திருப்பார்.
கவிஞர் கண்ணதாசன், வாலி போன்றோர் எழுதிய திரைப்படப் பாடல்கள் அடங்கிய பைண்டிங் செய்த தொகுப்பை ஆவலோடு படிப்பேன்.
ஒவ்வொரு வரிகளாக படிப்பேன்.
எழுத்து நடையை இரசிப்பேன்.
பாடல் வரிகளைப் படிக்க படிக்க அதன் அர்த்தங்கள் புரியும்.
கண்கள் ஆச்சர்யதோடு விரியும்.
ஒவ்வொரு பாடலிலும் சில வரிகள் பிடிக்கும்.
தமிழ் அர்த்தங்கள் விரியும்.
கவிஞர்களின் கற்பனை ஆச்சர்யமூட்டும்.
விழியே கதை எழுது...
மஞ்சள் வானம்...
தென்றல் காற்று... உனக்காகவே... நான் வாழ்கிறேன்...
Comments
Post a Comment